31 மார்., 2009

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் IV

எத்தீர்வை அடைந்திருந்தாலும் சரி, நீங்கள் மேலுமொரு தொடர்கேள்விக்கு பதிலளிக்கும் அவசியத்திற்குள்ளாவீர்கள். நான் இதை எப்படி தெரிந்துக்கொண்டேன்? மனிதன் முற்றுமுணர்ந்தவனோ, தவறிழைக்காதவனோ அல்ல என்பதால் எதனை அறிதலென காட்டப்பெறுமென்பதையும், உங்கள் தீர்வை உறுதியானதென்று எப்படி நிரூபிக்கமுடியுமென்பதையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

1. ஒரு மனிதன் தொடர் பகுத்தறிவினால் அறிந்துக்கொள்கிறானா அல்லது தீடீரென்று அதீதசக்தியால் பெற்ற ஞானத்திலிருந்தா?

2. பகுத்தறிவென்பது மனித உணர்வுகள் தரும் தளங்களை கண்டுணரவும் பிணைக்கவும் உதவும் கரணமா அல்லது பிறப்பதற்கு முன்பே மனிதமனங்களில் ஊரிப்போன பிறவிக் குணங்களினாலா?

3. பகுத்தறிவு உண்மையை அறியும் தகுதியுடையதா அல்லது பகுத்தறிவினும் மேலான வேறு எதாவது சுட்டுணர்வை மனிதன் பெற்றிருக்கிறானா?

4. மனிதன் நிச்சயத்தன்மையை அடையமுடியுமா அல்லது அவன் நித்தம் சந்தேகத்துடனேயே இருக்க விதிக்கப்பட்டவனா?

நீங்கள் ஏற்றுக்கொள்ளும் பதில்களின் தொகுதிக்கேற்ப உங்கள் தன்னம்பிக்கையின் அளவும் உங்கள் வெற்றிகளும் வித்தியாசப்படும். இப்பதில்கள்தான் epistemologyயின் தளம், மனிதனின் சுட்டுணர்வு வழிகளை ஆராயும் அறிதலின் கோட்பாடு.

2 கருத்துகள்: