31 மார்., 2009

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் VI

நான் இதுபோன்ற கருத்துப்பொருளைப்பற்றி (abstract) யோசிப்பதே இல்லை. எனக்கு திடமான, குறிப்பான, வாழ்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை மட்டும் கையால வேண்டும். எனக்கு எதற்கு தத்தவம் என்று பலரும் சொல்வதை போல் நீங்கள் இப்போது சொல்லக்கூடும். உங்களுக்கு என்னுடைய பதில் : திடமான, குறிப்பான, வாழ்க்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை கையாள….அதாவது இப்புவியில் வாழ முடிவதற்கு தத்துவம் அவசியமானது.

நான் எப்போதுமே தத்துவத்தால் வசப்படவில்லை என்று பலரும் இப்போது சொல்லலாம். நீங்கள் சொல்வதை சற்றே சரிபார்க்க சொல்கிறேன். எப்போதாவது இவற்றை நினைத்து அல்லது கூறி இருக்கிறீர்களா?

“இவ்வளவு நிச்சயமாக இருக்காதே…யாரும் எதைபற்றியும் நிச்சயமாக இருக்கமுடியாது”
இவ்வெண்ணம் David Hume மிடமிருந்து வந்தது (இன்னும் பலரிடத்திலிருந்தும்) அவரைப்பற்றி நீங்கள் கேள்விபட்டிராவிட்டாலும்.

அல்லது :
“இவை புத்தகங்களுக்கு ஒத்துவரும் ஆனால் நடைமுறையில் செயல்படுத்த முடியாது”
இதை Plato விடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது மிகவும் கீழ்த்தரமான செயல், ஆனால் நாம் மனிதர்கள் தானே. இவ்வுலகத்தில் எந்த ஒரு மனிதனும் உத்தமமானவன் இல்லை”
இதை Augustine னிடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“உனக்கு இது உண்மையானதாக இருக்கலாம் ஆனால் எனக்கிது உண்மையானதல்ல”
இதை William James இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“என்னால் உதவ முடியவில்லை, அவன் என்ன செய்தாலும் எவராலும் எதுவவும் உதவ முடியாது”
இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது உண்மையென உணருகிறேன்…ஆனால் என்னால் நிரூபிக்க முடியவில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது நியாயமானது, ஆனால் நியாயங்கள் யதார்த்ததோடு எதுவும் செய்வதற்கில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது தன்னலம் என்பதால் இது தீயது”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

“முதலில் செயல்படுங்கள் பிறகு யோசியுங்கள்” என்று செயல்பாட்டாளர்கள் (activists) சொல்வதை கேட்டிருக்கிறீர்களா.
இதை John Dewey இடமிருந்து பொற்றார்கள்.

இப்போது சிலர் சொல்லக்கூடும் “ஆமாம் நான் இவற்றை பலசமையங்களில் சொல்லி இருக்கிறேன், ஆனால் இவற்றை நான் என்றும் நம்பவேண்டுமென்பதில்லை. நேற்று அவை சரியானதாக எனக்கு பட்டிருக்கலாம் ஆனால் இன்று அவை சரியானதல்ல” இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

பலவிதமான யோசனைகளை பலவிதமான தத்துவங்களிலிருந்து அந்நேரத்திற்கு தகுந்தாற்போல் கடன் வாங்கிக்கொள்ளவோ சமாதானப்படுத்திக்கொள்ளவோ கூடாதா? என்று கேட்கலாம். இதை Richard Nixon இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்…அவர் Willam James இடமிருந்து.

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் - இதுபோன்ற கருத்துப்பொருளாகிய எண்ணங்களில் விருப்பமில்லையெனில், ஏன் அனைவரும் அவற்றை கட்டாயமாக பயன்படுத்த எண்ணுகிறீர்?

…தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக