31 மார்., 2009

தத்துவம் யாருக்கு தேவை - அயன் ராண்ட் V

இவ்விரண்டு கிளைகளும் தத்துவத்தின் நூலறிவு (theoritical) தளங்களாகும். மூன்றாவது கிளை ‘நன்னெறி’ - தத்துவத்தின் தொழில்நுட்பம் (technology) என கருதலாம். நன்னெறி என்பது பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் பொறுந்தாது, அவை மனிதர்களுக்கு மட்டுமேயானது. மனிதனின் குணம், செயல், மதிப்பு, இருக்கும் அனைத்துடனுமான அவனின் உறவுகள் என எல்லா விதத்திலும் பிரயோகிக்கக்கூடியது. நன்னெறி இல்லது அறம் என்பது மனிதனின் விருப்பங்களையும் செயல்களையும் வழிகாட்ட விளக்கப்படும் சன்மார்கங்களாகும், அதாவது வாழ்க்கையின் முறையான பாதையை தீர்மானிக்கும் விருப்பங்களையும் செயல்களையும்.

எங்கே இருக்கின்றேன் என்பதனையும் அதை எப்படி கண்டுபிடிக்கவேண்டுமென்பதனையும் அறிந்துக்கொள்வதை தட்டிக்கழித்ததனால் என் கதையில் வரும் விண்கலவீரனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெரியாமல் போனதுபோல் நீங்கள் இருக்கும் பிரபஞ்சத்தின் இயல்பையும், அறிதலுக்குண்டான விழிகளின் இயல்பையும், உங்களின் இயல்பையும் தெரிந்துவைத்துக்கொள்ளாதவரை நீங்கள் என்ன செய்யவேண்டுமென்பதை தெரிந்துக்கொள்ள முடியாது.

நன்னெறிக்கு செல்லும் முன்பு metaphysics & epistemology முன்னிறுத்திய கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும் : மனிதன் பகுத்தறிவாளனா, உண்மையை கண்டறியும் தகுதி உள்ளவனா அல்லது பொருந்தாத செயலற்றப்போன குருடன், பிரபஞ்சத்தின் தொடர்மாற்றங்களால் தாக்கப்பட்ட ஒரு துகளா? மேன்மையான செயல்களும் சந்தோஷங்களும் இப்புவியில் இருக்கும் மனிதனுக்கு சாத்தியமா அல்லது அவன் தோல்விகளுக்கும் அழிவுகளுக்கும் விதிக்கப்பட்டவனா? இக்கேள்விகளுக்கான பதில்களை பொறுத்து நன்னெறி எழுப்பும் கேள்விகளை சிந்திக்க தொடங்கலாம்.

1. மனிதனுக்கு எது நல்லது? எது கெட்டது? ஏன்?
2. மனிதனின் பிரதான அக்கறை சந்தோஷத்தை தேடுவதா அல்லது கஷ்டங்களிலிருந்து தப்பித்தலா?
3. தன் வாழ்வின் இலக்காக மனிதன் எதனை வைத்துக்கொள்ளவேண்டும்…சுய நிறைவையா அல்லது சுய சிதைவையா?
4. மனிதன் தன் மதிப்பீடுகளின்படி செல்லவேண்டுமா அல்லது தன்னுடையதைவிட மற்றவர்களின் விருப்பங்களையே மேலானதாக கருத வேண்டுமா?
5. மனிதன் மகிழ்ச்சியை நாட வேண்டுமா அல்லது சுயதியாகத்தையா?

இவ்விரண்டு விதமான விடைதொகுப்புகளின் விளைவுகளின் வித்தியாசத்தை நான் சொல்லவேண்டுமென்ற அவசியமில்லை. இவற்றை நீங்கள் எங்கும் காணலாம் - உங்களுக்குள்ளும் உங்களைச்சுற்றியும்.

நன்னெறி அளித்த பதில்களிலிருந்து மனிதன் சக மனிதனை எவ்வாறு நடந்தவேண்டுமென்பது தீர்மானமாகிறது, இதுவே தத்துவத்தின் நான்காவது கிளையான ‘அரசியலை’ நிச்சயப்படுத்துகிறது. இது முறையான சமூக ஒழுங்கின் கொள்கைகளை விளக்குவதாகும். தத்துவ செயல்பாட்டின் உதாரணத்தை போல, அரசியல் தத்துவம் உதாரணத்துக்கு உங்களுக்கு வாரத்தில் எந்த நாளில் எவ்வளவு எரிவாய்வு வழங்கப்படவேண்டுமென்பதை கூறாது. உங்களுக்கு எதனை எவ்வளவு வழங்க வேண்டும் என்று விதிக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டா என்பதனைக்கூறும்.

முதல் மூன்று கிளைகளை சார்ந்த தத்துவத்தின் ஐந்தாவதும் கடைசி கிளையுமானது ‘அழகியல்’. இது கலையை பற்றிய ஆய்வாகும். கலை மனிதனின் தேவைகளை கையாளும்…அவனின் உணர்வினைத்தூண்டிவிடும்.

1 கருத்து:

  1. 5 Benefits of Netent Slot Machines | Best Netent Online Casinos
    The febcasino slot machine games are considered 메리트카지노 the most entertaining and profitable game in the entire gambling world. There are lots of casino 카지노사이트 games

    பதிலளிநீக்கு